லேண்ட் சம்மந்தமா தொடர்பு கொள்ளும் பெண் பிள்ளைகளிடம் (Telecaller) கடுமையாக பேசி கட் செய்ய மனம் வரவில்லை.
பெரும்பாலும் ஏதோ ஒரு டிகிரி முடித்து குடும்ப சூழலின் காரணமாக சென்னைக்கு வந்து மாதம் 4000 முதல் ஆரம்பித்த இந்த டெலிகாலர் வேலை செய்கிறார்கள்.
ஒரு லேண்ட் விற்றால் இன்சென்டிவ் என்ற பெயரில் 2000 ஆயிரத்திற்கும் கம்மியாகவே கொடுகிறார்கள்.
100க்கு 70 சதவீதமான பெண்களுக்கு ஆங்கிலம் பேச அவ்வளவாக வருவதில்லை, காரணம் அரசாங்க பள்ளிகள். அதற்காக பள்ளிகளை முழுமையாக குறைகூற முடியாது.
நீங்கள் நினைப்பது போல இவர்கள் தஸ் புஸ்ஸேன்று ஆங்கில பேசி பன்னாட்டு நிறுவனத்தில் டெலிகாலர் பணியில் இருபதாயிரமோ முப்பதாயிராமோ சம்பளம் வாங்கி ஸ்பென்சருக்கும் சத்தியம் தியேட்டருக்கும் சென்று செலவு செய்பவர்கள் அல்ல.
பெண்கள் விடுதியில் தங்கினால் செலவு அதிகம் என்பதால் தங்களுக்கு பாதுகாப்பு குறைவு என்றாலும் வேறுவழியின்றி தனியாக அறையெடுத்து நான்கைந்து பெண்களாக பகிர்ந்து தங்கி பணத்தை மிச்சபடுத்தி பெற்றவர்களுக்கு அனுப்புகிறார்கள்.
எல்லாம் நம்ம ஊர்ல இருந்து வந்த பொண்ணுங்க தாங்க , தயவுசெய்து அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். தங்களுக்கு தேவையில்லை என்றால் வேண்டாம் என்று சாந்தமாக பேசி தொடர்பை துண்டியுங்கள். சில பேர் எவ்வளவு சொன்னாலும் கேட்காமல் நச்சரிக்கிறார்கள் என்று நீங்கலாம், நச்சரிக்க வேண்டுமென்பது அவர்கள் விருப்பமா என்ன ? இல்லை அப்படி அவர்களுக்கு சொல்லி தந்து பழக்கி இருக்கிறார்கள். அப்படி பேசினால் தான் சம்பளம் கிடைக்கும் .
நம்ம ஊர்கார பொண்ணுங்கள நாமளே புரிஞ்சுகளனா வேறு யாரு புரிஞ்சுகுவா ?
(எனக்கு தெரிந்த நம்ம ஊர்க்கார பெண்ணை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் எதேச்சையாக சந்தித்த போது அவர் தன்னுடைய வேலையை பத்தி சொன்ன போது என்னுள் ஏற்பட்ட தாக்கத்தை இங்கே பதிவிட்டுளேன்)
பெரும்பாலும் ஏதோ ஒரு டிகிரி முடித்து குடும்ப சூழலின் காரணமாக சென்னைக்கு வந்து மாதம் 4000 முதல் ஆரம்பித்த இந்த டெலிகாலர் வேலை செய்கிறார்கள்.
ஒரு லேண்ட் விற்றால் இன்சென்டிவ் என்ற பெயரில் 2000 ஆயிரத்திற்கும் கம்மியாகவே கொடுகிறார்கள்.
100க்கு 70 சதவீதமான பெண்களுக்கு ஆங்கிலம் பேச அவ்வளவாக வருவதில்லை, காரணம் அரசாங்க பள்ளிகள். அதற்காக பள்ளிகளை முழுமையாக குறைகூற முடியாது.
நீங்கள் நினைப்பது போல இவர்கள் தஸ் புஸ்ஸேன்று ஆங்கில பேசி பன்னாட்டு நிறுவனத்தில் டெலிகாலர் பணியில் இருபதாயிரமோ முப்பதாயிராமோ சம்பளம் வாங்கி ஸ்பென்சருக்கும் சத்தியம் தியேட்டருக்கும் சென்று செலவு செய்பவர்கள் அல்ல.
பெண்கள் விடுதியில் தங்கினால் செலவு அதிகம் என்பதால் தங்களுக்கு பாதுகாப்பு குறைவு என்றாலும் வேறுவழியின்றி தனியாக அறையெடுத்து நான்கைந்து பெண்களாக பகிர்ந்து தங்கி பணத்தை மிச்சபடுத்தி பெற்றவர்களுக்கு அனுப்புகிறார்கள்.
எல்லாம் நம்ம ஊர்ல இருந்து வந்த பொண்ணுங்க தாங்க , தயவுசெய்து அவர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள். தங்களுக்கு தேவையில்லை என்றால் வேண்டாம் என்று சாந்தமாக பேசி தொடர்பை துண்டியுங்கள். சில பேர் எவ்வளவு சொன்னாலும் கேட்காமல் நச்சரிக்கிறார்கள் என்று நீங்கலாம், நச்சரிக்க வேண்டுமென்பது அவர்கள் விருப்பமா என்ன ? இல்லை அப்படி அவர்களுக்கு சொல்லி தந்து பழக்கி இருக்கிறார்கள். அப்படி பேசினால் தான் சம்பளம் கிடைக்கும் .
நம்ம ஊர்கார பொண்ணுங்கள நாமளே புரிஞ்சுகளனா வேறு யாரு புரிஞ்சுகுவா ?
(எனக்கு தெரிந்த நம்ம ஊர்க்கார பெண்ணை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் எதேச்சையாக சந்தித்த போது அவர் தன்னுடைய வேலையை பத்தி சொன்ன போது என்னுள் ஏற்பட்ட தாக்கத்தை இங்கே பதிவிட்டுளேன்)
0 comments:
Post a Comment