headline photo

சாதியை ஒரு அடையாள சின்னமாக மட்டும் பார்த்தால் வன்முறைக்கு வேலையே இல்லை...

Tuesday, September 17, 2013

நீண்ட நாட்களாக என் மனதில் இருந்த சுமையை தற்போது எனது முகநூல் நண்பர்கள் 5000 பேருக்கும் முன்பு எனது ஆதங்கத்தை வெளிபடுதுகிறேன் .

பல நண்பர்களை கொண்டுள்ள நான் சிறிது நாட்களாக சில நண்பர்களின் பார்வைக்கு எதிரியாக சித்தரிக்க பட்டுளேன். காரணம் சில நேரங்களில் என்னுடைய சாதிய வெளிபாடு!!!

என்னை பொறுத்தவரை நான் சாதிய அடையாளத்தோடு இருப்பதை பெருமையாக தான் நினைக்கிறேன். அதில் தவறு இருப்பதாக எனக்கு தெரியவில்லை. என் தந்தை, என் பாட்டன் , என் வம்சம், என் குல தெய்வம் என் இனம் இப்படி என்னுடைய அடையாளத்தை

முறைபடுத்தி காப்பது கடமையாக நினைக்கிறேன்.

யாருக்காகவும் பயந்து என் குல அடையாளத்தை மறைக்க எனக்கு துளி கூட விருப்பம் இல்லை . அதே போல் எந்த சாதியையும் இகழ்ந்தும் என் இனம் முன்னேற துளி கூட நினைத்தது இல்லை .

என்னிடம் நட்பில் இணைந்திருக்கும் ஆயிரக்கணக்கான நண்பர்கள் சாதிய அடையாளங்களில் மறைமுகமாக திருமணத்திலோ இல்லை சுப காரியங்களிலோ சாதியத்தை வெளிபடுத்தியவர்கள் தான் அதனை மறுக்க தான் முடியும் மறைக்க முடியாது .

உங்களில் எத்தனை பேருக்கு என் சாதிய கோட்பாடுகளில் உடன்பாடு இருக்கிறதோ அவர்கள் என் நட்பு வட்டத்தில் தொடருங்கள் . பிடிக்கவில்லை என்றால் தங்கள் விருப்பம் போல் விலகி செல்ல முழு உரிமை இருக்கிறது .

உலகில் இந்து முஸ்லீம் கிருத்துவன் அனைவரும் தன்னையும் தன் இனத்தையும் பல்லாயிரகணக்கான வருடங்களாக அடையாள படுத்திக்கொண்டு தான் இருக்கிறார்கள்.

உதரணமாக நமது பிரதமர் மன்மோகன் சிங் பேருக்கு பின்னால் இருக்கும் சிங் என்ன அவர் படித்து வாங்கிய பட்டமா? தன்னை அடையாள படுத்திக்கொள்ள தன் பேருக்கு பின்னால் சிங்கையும் தலைக்கு மேல் தலைப்பாகையும் பின்பற்றுவது சாதி வெறி என்று எடுத்துக்கொள்ள முடியுமா ? அது சாதியோ மதமோ எதுவானாலும் குலமோ கோத்திரமோ அதிலென்ன உங்களுக்கு வெறுப்பு ?

அயல் மாநில நாடோடிகளிளிருந்து அண்டை மாநில நடிகைகள் வரை தன் பேருக்கு பின்னால் ரெட்டி , மேனன் ,அய்யர் என்று தன் பேருக்கு பின்னால் தன் குலத்தையோ சாதியத்தையோ வெளிபடுத்திகொண்டு திமிரோடும் தெம்போடும் தைரியத்தோடு வலம் வரும்போது காலம் காலமாக கழனியில் உழைத்து கட்டுபாடுகளை மதித்து மனித தன்மையோடு வாழும் நாம் நம் பேருக்கு பின்னால் தன் அடையாளத்தை கம்பீரமாக வெளிபடுத்தி கொள்வது எந்த விதத்தில் சாதி வெறியாகும்?

என்னை பொறுத்த வரை மனிதராக வாழும் அனைவரும் எதாவது ஒரு குல பின்னணியின் மூலமாக தான் உலகில் அறிமுகயாகிருப்பர்கள், அது கடவுளாகட்டும் இல்லை , மன்னராகட்டும்.

மூப்பனார் , கள்ளர், அய்யர் ,வெள்ளாளர் ,முக்குலத்தோர் தேவர் ,பறையர், பள்ளர் என்று பல சாதிகளின் மத்தியில் வன்னியர் என்பதும் ஒரு அடையாள சின்னம் தான் .வன்னியர்கள் அனைவரும் வன்முறையாளர்கள் என்றால் நான் எந்த வன்முறையில் இறங்கி பார்திருக்கீர்கள் ? எந்த பேருந்தை எரித்து பார்திருக்கீர்கள் ?

உயிரற்ற பல சமவெளிகள் மலைகள் பள்ளத்தாக்குகள் போன்ற உயிரற்றவைகளுக்கெல்லாம் தனி வரலாறு இருக்கும் போது உயிரோடு இருக்கும் மனிதர்களுக்கு வரலாற்று சின்னங்கள் வழிபாட்டு ஆலையங்கள்,குலப்பெருமைகள் என்று தனி தனியே குலதிர்கேற்ப இருப்பதில் என்ன தவறு ?

வன்னியர்களை வன்முறையாளர்களாக சித்தரித்தது யார் ? வண்முறையை தூண்டியது யார் ?ஜெயலலிதாவை கைது செய்தால் கடையடைத்து பேருந்து எரித்தவர்கள் தொண்டர்கள் ,ஆனால் மருத்துவர் அய்யாவை கைது செய்த போது போராடிய நாங்கள் சாதி வெறியர்கள் ?இப்போது சொல்லுங்கள் யார் சாதி வெறியை சித்தரித்தது ?

சிலருக்கு கலைஞர் எப்படி தலைவனோ ,சிலருக்கு ஜெயலலிதா எப்படி தலைவியோ அதே போல் தான் எனக்கும் என் இனத்திற்காக பாடுபடும் எங்கள் அய்யா எனக்கு தலைவனே , அதில் எந்த மாற்று கருத்தும் இல்லை ...

ஒவ்வொரு சமூகத்திற்கும் அந்தந்த சமூகத்திற்கென்று என்ற சாதி/குல அடையாளமும் .சமூகத்தை கட்டி காக்க குல தலைவனும் இருப்பதில் ஆச்சர்யம் என்ன ?

சாதி, மத, குலம் என்ற அனைத்தையும் ஒழிக்க எந்த கொம்பனாலும் முடியாது என்று சத்தியமாக நம்புகிறவன் நான். ஏன் என்றால் என் பிள்ளைக்கு நான் அன் சொல்லி கொடுக்கும் பாடம் ,கல்லணையை கட்டியவன் கரிகாற்"சோழன்" என்றும் தஞ்சை பெரிய கோயிலை கட்டியது இராஜராஜ"சோழன் " என்று தான் கற்றுகொடுக்கிறேன் , அப்படி தான் கல்வெட்டுகளிலும் , காகிதத்திலும் பதியப்பட்டுள்ளன . சோழன் என்பது படித்த பட்டமா இல்லை வம்சத்தின் அடையாளமா ?

காலங்கலாமாக பிஞ்சுகளின் பாட புத்தகத்தில் வம்சத்தையும் , வம்சத்தின் வழியாக வந்த சாதிய தாக்கத்தையும் புகுத்தியது வன்னியனா? இல்லை வரலாறா? அரசாங்கம் அச்சடித்து பாடநூல்களில் வெளியிட்டால் அது வரலாறு அதனையே நாங்கள் செய்தால் நாங்கள் சாதி வெறியனா? அதற்காக நாங்கள் வருத்தபடுவதும் இல்லை வருத்தப்படவும் மாட்டோம் .

எங்கள் பெருமையை நாங்கள் எடுத்துரைக்க எங்களுக்கு எவ்வளவு உரிமை இருக்கிறதோ அதன் போல் உங்களுக்கும் இருக்கிறது அந்த பெருமையை காப்பதும் , காவு கொடுப்பதும் உங்கள் கையில் தான் உள்ளது !!!

எங்கள் இனத்திற்காக பாடுபட எங்கள் அய்யா இருக்கிறார் அதே போல் உங்கள் குலதிர்க்காக பாடப்பட உங்கள் தலைவன் இருக்கலாம். ஆனால் நாங்கள் எந்த விதத்திலும் எந்த சாதியையும் எதிராக நினைத்தது இல்லை .

ஆனால் சத்தியமாக சொல்கிறேன் நாங்களும் மனிதர்கள் எங்களை அடித்தால் திருப்பி அடிப்போமே தவிர அணைத்தால் அத்தனையையும் இழப்போம் உங்களுக்காக !!!

என் அப்பன் கோவிந்தராஜ் படையாட்சி , என் பாட்டன் காசி படையாட்சி , என் குலதெய்வம் பேர் கருப்பு சாமி என் பெயர் தேவா படையாட்சி... ஆம் நான் சாதிய அடையாளத்தை என் பேருக்கு பின்னால் சேர்பதனால் வன்முறையை தூண்டும் என்று நினைத்தால் அதற்க்கு நான் பொறுப்பில்லை ! சாதியை ஒரு அடையாள சின்னமாக மட்டும் பார்த்தால் வன்முறைக்கு வேலையே இல்லை...

சமுதாயம் காப்பது சத்ரியன் தர்மம் !!!

எங்கள் தலைவனை நோக்கி எங்கள் பயணம் தொடரும் ...

0 comments:

Post a Comment